ஆஸ்திரேலியாவில் உள்ள லாலிபாப் பிளேலேண்டில் இரண்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக என்.எஸ்.டபிள்யூ போலீசார் விசாரிக்கின்றனர்.
இரண்டு வயது சிறுமி
சிட்னியின் மேற்கில் உள்ள பென்ரித்தில் ஒரு விளையாட்டு மையத்தில் ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் தெரிஞ்சுக்கோங்க ⇒⇒⇒ தொடர் கொலைகள் !! பதற்றத்தில் சூடான் மக்கள்!
விளையாட்டு மையத்தில் விளையாடிய சிறுமி திடீரென 20 நிமிடங்களாக காணாமல் போனதால் சந்தேகப்பட்ட சிறுமியின் தாயார் தேடிய போது அலங்கோலமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
பாலியல் வன்கொடுமை
இதனையடுத்து அவர் போலீசில் புகார் அழுதுள்ளார். ஆரம்ப விசாரணையில் அவர் தெரியாத ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீசார் கூறுகின்றனர். மேலும் சிசிடிவி கேமரா மூலம் காட்சிகள் பெறப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் நிகழ்வு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.