ட்விட்டர் பதிவில் குழந்தைகளின் ஆபாச படங்கள் …!- ட்விட்டரின் விளக்கம் !!!

0

சமீபகாலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முக்கிய சமூக வலைத்தளமாக விளங்கும் ட்விட்டரில் குழந்தைகளின் ஆபாசப் படங்களின் பதிவு தொடர்பாக ட்விட்டர் தரப்பு ஒரு விளக்கத்தை அளித்து உள்ளது. அதன்படி  ஆபாச படங்களை ட்விட்டரில்  இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம்  ஜூன் 29ம் தேதி  டெல்லி போலீசில் ட்விட்டர் மீது ஒரு புகார் அளித்து உள்ளது. அந்த புகாரில்  ட்விட்டர் பதிவில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது.  மேலும் இது தொடர்பான ட்விட்டர் பக்கங்களை அந்த ஆணையம் சமர்ப்பித்து உள்ளது. அதன்படி, ட்விட்டர் இந்தியா மற்றும் ட்விட்டர் கம்யூனிகேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் போன்றவற்றிக்கு  எதிராக போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ட்விட்டர் தரப்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை  ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது ட்விட்டர் நிறுவனம் என்றும், மேலும் குழந்தைகளின்  ஆபாச படங்களை ட்விட்டரில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here