
மற்ற உலக நாடுகளை விட இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்த நிலையில், அதை குறைக்க அரசும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் இந்தியாவில் கடந்த 2012 ஆம் ஆண்டில் 22 சதவீதமாக பதிவாகிய குழந்தைகளின் இறப்பு விகிதம், 2017 ஆம் ஆண்டு 18 சதவீதமாக குறைந்தது. இந்நிலையில் ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பு அலுவலகத்தில் தாய்-சிசு உடல்நலம் குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய இயக்குநர் மருத்துவர் அன்ஷு பானா்ஜி குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கட்டுக்குள் கொண்டு வர இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வாட்ஸ்ஆப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்.., மொபைல் எண்ணை வெளியிட்ட நிர்வாகம்!!
இதன் மூலம் இந்தியாவில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதே போன்ற நடவடிக்கையை தொடர்ந்து இந்திய அரசு மேற்கொண்டால், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் குழந்தைகளின் இறப்பு விகிதம் இல்லாத நாடாக இந்தியா உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.