தவறு செய்தால் பதவி நீக்கம் – அமைச்சர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை !!!
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் முதலாவது அமைச்சரவை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பனி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர்கள் தங்கள் துறையின் புள்ளி விவரங்களை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் மற்றும் அமைச்சர்கள் தங்களது பிஏ க்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
கட்சி பிரச்சனைகளுக்காக போலீஸிடம் நேரடியாகவோ அல்லது போன் செய்யவோ கூடாது என்றும் அறிவித்துள்ளார். முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.