ஆஸ்கர் விருதை வென்ற யானைகள் பற்றிய ஆவண குறும்படத்தின் இயக்குநருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பரிசுத்தொகை வழங்கியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தி எலிபன்ட் விஸ்பரஸ்:
சமீபத்தில் நடந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. மேலும் வண்ணமயமான அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ‘தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டு இருந்த நிலையில் விருதையும் தட்டி தூக்கியது. இந்த குறும்படத்தின் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் இந்த ஆஸ்கர் விருதினை பெற்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் ‘தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படம் ஆஸ்கார் விருது வென்றதை இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். யானைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்றும், அதனால் ஏற்படும் நன்மை தீமை என எல்லாத்தையும் சுட்டிக்காட்டி எடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் கார்த்திகிக்கு தமிழக முதல்வர் தலா 1 கோடி ரூபாய் பரிசு தொகையாக வழங்கியுள்ளார். இதற்கு முன்னர் தமிழ்நாடு யானைகள் முகாமில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அனைவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. .