பிரதமர் மோடியின் எந்த உரையிலும் எல்லை பிரச்சனை குறித்து சீனாவின் பெயரை குறிப்பிடவில்லை என்றும் அதன் மர்மம் என்னவென்றும் காங்கிரஸ் எம்.பி., ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று மோடி உரை..!
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட பயங்கரவாதல் மோதலில் இந்திய ராணுவ வீர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.சீன தரப்பில் 45க்கும்மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் ஆனால் சீனா இதை உறுதிப்படுத்தவில்லை. இதையடுத்து சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று திடீர் பயணமாக லடாக் சென்று லே பகுதியில் தரைமட்டத்திலிருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள நிமு பகுதிக்கு மோடி சென்றார். அப்போது அங்கிருந்த வீரர்களிடையே உரையாற்றிய மோடி எல்லையை விரிவுபடுத்த துடிக்கும் நாடுகள் அதை கைவிட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது இதில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் உறுதிபட தெரிவித்தார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம் ட்வீட்..!
இது குறித்து எம்.பி., ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளதாவது முதல்வர்கள் கூட்டத்தில் உரை தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் சீனா என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன் ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன் ஏன் இந்தத் தயக்கம் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
For the third time in a week, PM did not name China as the aggressor, why?
What is the purpose of talking about an unnamed ‘enemy’ to the people of India and the jawans in Ladakh?
— P. Chidambaram (@PChidambaram_IN) July 3, 2020