சத்திஷ்கரில் 16 வயது பெண் பாலியல் வன்கொடுமை – தந்தை மற்றும் 4 வயது சிறுமி படுகொலை!!

0

சத்திஸ்கர் பகுதியில் 16 வயது பெண்ணை பாலியல் கொடுமை செய்து, தந்தை மற்றும் 4 வயது சிறுமையை கொடூரமாக சில மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்திஸ்கர்:

தற்போது நம் நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என குற்றங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. இதற்காக அரசு மிக கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும் இவை அனைத்தும் குறைந்த பாடில்லை என்றே சொல்லலாம். இதனை தடுக்க அரசு பல்வேறு தரப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால் அவை அனைத்தும் பலனில்லாமல் தான் போகிறது. தற்போது சத்திஸ்கர் பகுதியில் ஓர் கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சத்திஸ்கர் பகுதியில் உள்ள கோர்ப்பா மாவட்டத்தில் சத்ரெங்கா என்னும் கிராமம் அருகே உள்ள மெல்ரு காவல் நிலையத்தில் கடந்த 2ம் தேதி அன்று ஓர் புகார் வழங்கப்பட்டது. அந்த புகாரில் தனது 55 வயதான தந்தை, 16 வயது சகோதிரி, மற்றும் தனது 4 வயது குழந்தையை காணவில்லை என்று தெரிவித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறை உதவி கண்காணிப்பாளர் கீர்த்தன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதன்பிறகு காணாமல் போன தந்தை மற்றும் 4 வயது சிறுமியின் உடலை போலீசார் சடலமாக மீட்டனர்.

நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலையுடன் கணவர் கவுதம் – ரசிகர்கள் பிரம்மிப்பு!!

மேலும் அவரது சகோதிரியை உயிருடன் மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலையே அவரது சகோதிரி பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். மேலும் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சி அடைய செய்தது. தற்போது இதுகுறித்து நடவடிக்கை எடுத்த போலீசார் 6 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, திட்டமிட்ட சதி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here