தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
மராட்டியம் முதல் உள் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று(17.04.2021) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், வடக்கு உள் தமிழகம், மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் 18.04.2021 மற்றும் 19.04.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வருகிற 20.04.2021 மற்றும் 21.04.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த அஷ்வினின் “கிரிமினல் கிரஷ்” பாடல் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!
ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். வருகிற 20.04.2021 மற்றும் 21.04.2021 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நாமக்கல், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம்.
இந்தியாவிற்கு வருகிறது 6 ரபேல் போர் விமானங்கள் – பலமடையும் விமானப்படை!!
மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் தலா 6செ.மீ., ஒகேனக்கல், பென்னாகரம் தலா 5செ.மீ., திருத்துறைப்பூண்டி, சாத்தூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை தலா 4 செ.மீ., இரணியல், திருச்சுழி தலா 3செ.மீ., அருப்புக்கோட்டை, பேரூர், எடப்பாடி, திருபுவனம், ஈரோடு, சித்தார், கோவிலான்குளம், வத்திராயிருப்பு, ராதாபுரம் தலா 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும் கடலுக்குள் செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.