தமிழகத்தில் கடலோர பகுதியான வங்கக்கடல் மற்றும் கர்நாடக பகுதியில் இருந்து தென் கேரளம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
இன்று(ஏப்ரல் 28) தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் 29.04.2021 முதல் 02.05.2021 வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் தமிழகம் உள் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் நாட்களில் 1 முதல் 2 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகமாக உணரப்படும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஆண்டிபட்டி,சிவலோகம் தலா 2, கள்ளிக்குடி, கோவில்பட்டி, ஆலங்குடி, வேதாரணியம், அணைப்பாளையம் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.