இன்று வெளியான சென்னை வானிலை மையம் அறிக்கையின் படி அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும். மேலும் ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
தமிழகத்தில் இந்த ஆண்டு வானிலை நிலவரம் சற்று வினோதமாக இருந்து வருகிறது. காரணம் இந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் ஜனவரி மாதத்தில் கடுமையான மழை பெய்தது. ஆண்டு தோறும் ஜனவரி மாதம் வறண்ட வானிலையாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு அதற்கு நேர் எதிர்மறையாக இருந்தது. தற்போது தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்படி 26.02.2021 முதல் வருகிற 02.03.2021 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
தற்காலிக டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தேர்வு – போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு!!
மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். கடத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை. மேலும் கடலுக்குள் செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.