தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி பணிபுரியும் பலரும், வருகிற 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் போக்குவரத்துகளில் நெரிசல் இல்லாமல் பயணிகள் பயணம் செய்ய கூடுதல் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்களை மத்திய மாநில அரசுகள் இயக்க முடிவு செய்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் நாளை (நவம்பர் 9) சென்னை to நெல்லை (வண்டி. எண்: 06067) வழித்தடத்தில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருப்பதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாளை காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 02.15 மணிக்கு நெல்லை சென்றடையும்; மறுமார்க்கமாக இந்த வந்தே பாரத் ரயில் (வ.எண். 06068) நெல்லை இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என குறிப்பிட்டுள்ளனர்.
TNPSC குரூப் 4 தேர்வர்களே., 2018 ன் விடையுடன் கூடிய வினா வங்கி இதோ., படித்து பயன்பெற்று கொள்ளுங்க!!