IPL 2023: 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்த சென்னை…..,

0
IPL 2023: 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்த சென்னை.....,
IPL 2023: 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்த சென்னை.....,

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 67 ஆவது போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்த வகையில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து, சென்னை அணி சார்பில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் (79), கான்வே (87), ஷிவம் துபே (22), தோனி (5), ஜடேஜா (20) ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். இதன் மூலம், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. இப்போது, 224 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி வழக்கம் போல ஆரம்பத்தில் சற்று தடுமாறியது.

மாலையும் கழுத்துமாக வந்து ஷாக் நியூஸ் சொன்ன bb ஜனனி., அவரே வெளியிட்ட பதிவு!!

ஆனால், டேவிட் வார்னர் மட்டும் 58 பந்துகளுக்கு 86 ரன்கள் அடித்து டெல்லி அணியை சற்று நிமிரச் செய்தார். இருப்பினும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம், டெல்லி அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது சென்னை அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here