செய்பர்டை குறிவைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் – பயிற்சியாளர் பிளெமிங் சூசக கருத்து!!

0

2021யில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் நியூஸிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரரான செய்பர்டை சிஎஸ்கே அணி குறிவைத்துள்ளது போல் தெரிகிறது. இவரை சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங் பரிசீலித்து வருகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஐபிஎல் போட்டிகள் என்றாலே சிஎஸ்கே அணிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. அந்த அணியின் கேப்டன் தோனியை ரசிகர்கள் அனைவரும் தல என்றும், சுரேஷ் ரெய்னாவை சின்ன தல என்றும் அழைத்து வருவார்கள். இவர்கள் இரண்டு பேருக்கு மட்டுமே பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் சிஎஸ்கே அணி ஐபிஎல் போட்டி என்றாலே மிகவும் சிறப்பாக விளையாடி வரும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்டில் நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி சொதப்பியது. குவாலிபையர் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியே சென்றது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சிஎஸ்கே அணி இது வரை விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெறாதது இதுவே முதல் முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐபிஎல் ஆக்சன் நடக்கவிருக்கிறது. இதில் அனைத்து அணிகளும் தங்களது அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இதனை இப்போதே தொடங்கி விட்டார் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங்.

சையது முஸ்தாக் அலி போட்டிக்கான தமிழக அணி அறிவிப்பு !!

அவர் கூறியதாவது, நியூஸிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் டிம் செய்பர்ட் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார். தற்போது அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 139.68 என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் நிறத்தில் ஓர் சீருடை உள்ளது அது உங்களை எப்போதும் வரவேற்கும் என்று கூறியுள்ளார். இதனால் போட்டியாளர்கள் தேர்வில் செய்பர்டை சிஎஸ்கே அணி தேர்வு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிம் செய்பர்ட், பிரெண்டன் மெக்கல்லம் அளித்த பயிற்சியில் தான் சிறப்பாக விளையாடி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here