2023 ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பலர் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று உரையை தொடங்கினார். இயற்கை பேரிடர்களில் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பாராட்டிய ஆளுநர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் பேரவையில் தெரிவித்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் சில அறிவிப்புகளை கூறாததால் மத்திய அரசு கவர்னர் உரையை ஏற்றுக்கொள்ள கூடாது என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் பேசிக் கொண்டிருக்கும் போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் இன்று (10.01.2023) வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் “தமிழ் வாழ்க” என்ற பதாகைகளை ஏந்தியபடி ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் இட்டு வருகின்றனர்.