சென்னையில் மெட்ரோ பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது. 118.9 கி,மீ. தொலைவில் 128 ரயில் நிலையங்கள் அமைக்க உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்து இருந்தது. இரு ரயில் நிலையங்களுக்கிடையே 1 கி.மீ.க்கும் குறைவான தூரம், சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் சில ரயில் நிலைய கட்டுமானங்கள் கைவிடப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில் பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி என 10 ரயில் நிலைய கட்டுமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்படாது. ஒவ்வொரு கி.மீ.க்கும் இடையில் ஒரு ரயில் நிலையம் இருக்கும் வகையிலே மறுசீரமைக்கப்பட்டு வருகிறது என சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
நான் அம்மா வீட்டுக்கு கிளம்புறேன்.., தனம் எடுத்த அதிரடி முடிவு.., அதிர்ச்சியடைந்த கதிர், முல்லை!!
இந்த ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி ரத்து செய்யப்படுவதால் ரூ.1,200 கோடி வரை கட்டுமான செலவுகள் குறையும். மேலும் 2ம் கட்ட மெட்ரோ பணியில் 118.9 கி.மீ.க்கு பதிலாக 118.1 கி.மீ. ஆக தொலைவு குறைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.