சென்னையில் இன்று யாரும் எதிர்பாராத வகையில் அரசு மருத்துவமனையின் செவிலியர் கல்லூரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி பரபரப்பாகியுள்ளது.
சென்னை:
கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் நமக்கு மோசமாக தான் இருந்து வருகிறது. காரணம் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியது. அதேபோல் இந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு, காஸ் சிலினர் என பல வகையான கஷ்டங்களை தமிழக மக்கள் அனுபவித்து வருகின்றனர். தற்போது அந்த வகையில் மேலும் ஓர் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
அதன்படி இன்று யாரும் எதிர்பாராத வகையில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் செவிலியர் கல்லூரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஏசியில் ஏற்பட்ட மின் கசிவினால் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ ஏற்பட்டதும் மாணவர்கள் உடனே வெளியேற்றப்பட்டனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயினை வெற்றிகரமாக அணைத்தனர். மேலும் மாணவர்கள் உயிருக்கு எந்த சேதாரமும் இன்றி அனைவரும் தப்பித்தார்.