கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலங்களில் சென்னை போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் பதவியேற்றார். அனைத்து துறைகளுக்கும் முழு ஒத்துழைப்பும் கொரோனா தடுப்பில், போலீசின் முழு அமைப்பும் பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் பதவியேற்பு :
கொரோனா பேரிடர் முதல் அலையின் போது காவல் துறையினர் அயராது தங்களின் கடமையை சிறப்பாய் செய்து முடித்தனர். முதல் அலையின் போது காவல்துறையினர் ஆற்றிய பங்கு இன்றியமையாதது. தற்போதும் கொரோனா 2ம் அலையில் காவல் துறையினர் தங்களின் முழு ஒத்துழைப்பையும் கொடுத்து வருகின்றனர். முழு ஊரடங்கு போடப்பட்ட நிலையில் தேவையில்லாமல் மக்கள் சாலையில் வருவதை கண்காணிப்பதும் இரவு நேரங்களில் பாதுகாப்பது என பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது சென்னையின் போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் பதவியேற்றவுடன் சென்னையில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும், கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக பணியாற்றும் அனைத்து துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பது தன போலீஸ் இன் கடமை எனவும், கொரோனா தடுப்பு பணியில் போலீஸின் முழு அமைப்பும் பயன்படுத்தப்படும் எனவும் செய்தியாளரிடம் அவர் கூறினார்.