இன்ஸ்டாவில் மூழ்கிய மகனை கண்டித்த தாய்.., ஓடும் ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை!!

0
இன்ஸ்டாவில் மூழ்கிய மகனை கண்டித்த தாய்.., ஓடும் ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை!!
இன்ஸ்டாவில் மூழ்கிய மகனை கண்டித்த தாய்.., ஓடும் ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை!!

சென்னை பல்லாவரம் அருகே மகனை தாய் கண்டித்ததால் அந்த இளைஞன் செய்த காரியம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் பாய்ந்த இளைஞன்:

தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைலில் மூழ்கிய வண்ணம் இருக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கேம்ஸ் போன்ற பல செய்யலிகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை அடிட் ஆக விடமால் பெற்றோர்கள் கண்டித்து வந்தால், விபரீத முடிவை எடுக்கின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது கண்ணபிரான் கோவில் தெருவில் முருகன் என்பவர் தனது மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் , மணிகண்டன் என்ற ஒரு மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். 3 பேரும் பட்டப்படிப்பை முடித்த நிலையில், இரண்டு பெண்கள் மட்டும் வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தனர். ஆனால் மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக எடுக்கும் வீடியோவை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

டிச.4 முதல் ஜன.2 வரை மீண்டும் முழு ஊரடங்கு., இதற்கெல்லாம் அனுமதி இல்லை! காவல்துறை உத்தரவு!!

இதை மணிகண்டன் தாய் பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் இன்ஸ்டகிராம் மீது இருந்த மோகத்தால் தொடர்ந்து வீடியோவை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் மணிகண்டன் இன்ஸ்டாவில் வீடியோ பதிவிடும் போது, அவருடைய தாயார் மீண்டும் கண்டிக்க, அதை தாங்க முடியாமல் மணிகண்டன் பல்லாவரம் ரயில் நிலையம் அருகே ஒரு ரயில் வேகமாக சென்ற போது அதன் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here