கொரோனா தொற்று குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்!!!

0

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையும் வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கவேண்டும் என சென்னை உயர்நிதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மே மாதம் உச்சத்தை அடைந்தது. தற்போது இதன் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த ஊரடங்கு உத்தரவில் வாடகை வாகனங்கள், டேக்ஸி, மற்றும் ஆட்டோக்கள் இ-பதிவுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. பம்ப் செட் பழுது நீக்கும் கடைகள், கண்ணாடி கடைகள் அனைத்தும் காலை 9 மணிமுதல் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சலூன்  கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநிலத்தில் கோவிட்-19 தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையும் வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கவேண்டும் என சென்னை உயர்நிதிமன்றம் தமிழக அரசுக்கு கூறியுள்ளது. மேலும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here