தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலையின் பரவல் குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவை இன்னும் சில நாட்களில் தாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து உள்ளனர். இதற்கு ஏற்ப எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா அவர்களும் கொரோனா மூன்றாம் அலை அடுத்த ஆறு அல்லது எட்டு வாரங்களில் தொடங்கும் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம், கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இரண்டாவது அலையை சமாளிக்க எடுக்கப்பட்ட வசதிகளை அகற்றாமல் தொடர வேண்டும். உயிர் சேதங்கள் ஏற்படுவதை தடுக்க ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
மேலும் தடுப்பூசி விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்த புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். திரும்ப தொற்று பரவல் ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்