சினிமா பாணியில் முடிக்குள் மறைத்து வைத்து தங்கத்தை கடத்த முயன்ற குற்றவாளிகளை சென்னை விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர் சுங்கத்துறை அதிகாரிகள்.
தங்கம் கடத்தல்
ஒவ்வொரு இடங்களிலும் விதவிதமாக, வித்தியாசமாக, நூதனமான முறையில் தங்கம் கடத்தல் செய்யப்பட்டு வருகிறது. எப்படிப்பட்ட காவல் இருந்தாலும், பலத்த பாதுகாப்புகள் இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. வயிற்றுக்குள் தங்கத்தை வைத்து கடத்துதல், பற்களில் வைத்து கடத்துதல் போன்ற நூதனமான முறையில் கடத்தல் சம்பவங்கள் நடக்கிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்புள்ளதா?? மத்திய அமைச்சர் விளக்கம்!!
இந்த வகையில் தங்கத்தை முடிக்குள் வைத்து நூதன கடத்தல் செய்ய முயன்றவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். நடிகர் சூர்யாவின் அயன் பட பாணியில், துபாயிலிருந்து சென்னை வந்த கும்பல், முடிக்குள் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்துவந்துள்ளது. அந்த கும்பலை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடமிருந்த 2.53கோடி மதிப்புள்ள 5.55 கிலோ தங்கத்தை கைப்பற்றியுள்ளனர்.