இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தான் பங்குதாரராக உள்ள 7 ink Brews என்ற பீர் நிறுவனத்தை, சென்னையில் துவங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தங்க நிற உடையில் டாலடிக்கும் முன்னழகை காட்டிய நடிகை ராஷ்மிகா.., வர்ணிக்கும் ரசிகர்கள்!!
தோனியின் திட்டம்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பொறுப்பு கேப்டனாகவும் மாஸ் காட்டியவர் கேப்டன் தோனி. இவர் தமிழ்நாட்டை தனது 2வது வீடு என அடிக்கடி கூறி வருகிறார். இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த 7 ink Brews என்ற பீர் நிறுவனம், தோனியை தன்னுடைய விளம்பர தூதராகவும், பங்குதாரராகவும் அறிவித்தது. இந்த நிறுவனம் Copter7 என்ற பிராண்ட் பெயரில் ஸ்ட்ராங்கான பீர்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே, மும்பை, பெங்களூர், கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் தனது பிராண்டை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம், சென்னையிலும் தனது கிளையை தொடங்க திட்டமிட்டுள்ளது.
தோனிக்கும் சென்னைக்குமான உறவை வைத்து இந்த நிறுவனம் தலை நகருக்குள் நுழைய முயற்சிப்பதாகவும், இதற்காக அக்கார்ட் குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதில் கவனிக்க தகுந்தது என்னவென்றால், திமுக எம்பி ஜெகத்ரட்சகனால் நடத்தப்பட்டு வரும் நிறுவனம் அக்கார்ட் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்