சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மழை நீரை வெளியேற்றுவது குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
கனமழை:
சென்னையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஆரம்பித்த கனமழை தற்போது வரை நிற்காமல் தொடர்ந்து பெய்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் சென்னை வானிலை மையம் தமிழகத்திற்கு நாளை வரை ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. மேலும் இந்த மழையால் மக்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்பதற்காக அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ராஜிவ் காந்தி வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
அந்த வகையில் சென்னை மாநகராட்சி ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னையில் மழைநீர் தேங்கினால், அதை வெளியேற்றுவதற்கு 910 மின் மோட்டார்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் கடலோரம் மற்றும் ஆற்றங்கரை பகுதியில் வசிக்கும் மக்களை வேறொரு இடத்திற்கு மாற்றம் செய்ய 169 முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.