சென்னை மாநகராட்சியில் உள்ள 1000 பேருந்து நிறுத்தங்கள் மறுசீரமைப்பு செய்யபடவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது .
பேருந்து நிறுத்தங்கள் மறுசீரமைப்பு :
சென்னையில் உள்ள பல பேருந்து நிறுத்தங்கள் மோசமாக உள்ள நிலையில் அதனை சரி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .இதனை தொடர்ந்து பேருந்து நிறுத்தங்கள் சரி செய்யப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தெரிவித்ததாவது : சென்னையில் 779 பேருந்து நிறுத்தங்கள் மோசமாக உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள 1000 பேருந்து நிறுத்தங்கள் மறுசீரமைப்பு செய்யபடவுள்ளதாக தெரிவித்தார். மேலும் பராமரிப்பு பணி முடிந்த நிலையில் 65 பேருந்து நிறுத்தங்கள் செயல்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது .
வங்கக்கடலில் சூறாவளிக்காற்று.., அடுத்த 5 நாளுக்கு மழை தமிழகத்தில் மழை!!
குறிப்பாக சென்னையில் பாதிப்படைந்த பேருந்து நிறுத்தங்களை சீரமைப்பு செய்யவும் மற்றும் அதன் மூலம் வருமானம் ஈட்டவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சேவைகள் இன்னும் மேம்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது .