சென்னை மாநகராட்சி மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை – மீறினால் 1000 ரூபாய் அபராதம்!!

0

சென்னை மாநகராட்சி மக்களுக்கு, போகி தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை மாநகராட்சி நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.

மாநகராட்சி எச்சரிக்கை :

தமிழகத்தில் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழர்களின் பண்டிகையான இந்த திருநாளை, மிகச் சிறப்பாக கொண்டாட பொது மக்கள் தயாராகி வருகின்றனர். பொங்கலுக்கு முதல் நாள், அதாவது நாளைய தினம் போகி பண்டிகை கொண்டாடப்படும். “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது இந்த போகியின் நோக்கம். இந்த பண்டிகையின் போது, பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர்களை எரிக்கக் கூடாது என  சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை மீறுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாட்டை தடுக்க, மாநகராட்சி எடுத்துள்ள இந்த முடிவை சமூக ஆர்வலர்கள் பரவலாக வரவேற்று வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here