சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் புதிய கேலரிகளை மார்ச் 17ம் தேதி முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சேப்பாக்கம்
இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று உள்ள நிலையில், அடுத்ததாக ஒருநாள் தொடரில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது, மார்ச் 17, 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில், 3வது மற்றும் கடைசி போட்டியானது, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த சேப்பாக்கம் மைதானத்தில், கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணி நடைபெற்றதால், சர்வதேச அளவிலான போட்டிகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்துள்ளதுடன், நவீன வசதிகளுடன் கூடிய எக்ஸ்ட்ரா கேலரிகளும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
IND vs AUS Test: தொடரின் நாயகர்களான அஸ்வின் & ஜடேஜா…, டிராபியை வென்றதும் ரோஹித் செய்ததை பாருங்கள்!!
இதனை, வரும் மார்ச் 17ம் தேதி தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைப்பதுடன், ஆய்வு செய்வும் உள்ளதாக, தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவர் சிகாமணி தெரிவித்துள்ளார். மேலும், இந்த திறப்பு விழாவில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் கலந்து கொள்வார் என பரவலான தகவல் வெளியாகி வருகிறது.