சென்னையில் பேருந்துகள் இயக்கப்படும் !!! – அரசு அறிவிப்பு
தமிழகத்தில் நோய்பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இருப்பினும் நோய் தொற்று அதிகரித்து வந்ததால் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்தது.
இதனை அடுத்து இன்று முதல் முழு ஊரடங்கு அமலாகி உள்ள நிலையில் பேருந்துகள் இயக்கப்படாது என அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
சென்னையில் தற்போது அத்தியாவசிய, அவசர பணிகளுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய வழித்தடங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மேலும் அத்தியாவசிய, அவசர பணிகளுக்காக செல்லும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.