குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகிய நிலையில் அவரை குறித்து செஃப் தாமு சில விஷயங்கள் பேசியுள்ளார்.
மணிமேகலை
விஜய் டிவியில் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக விளங்கி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக ஜொலித்து வந்தவர் தான் மணிமேகலை. இவர் சில வாரங்களுக்கு முன்பு ஷோவில் இருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அவர் ஏன் விலகினார் என்று தற்போது வரை யாருக்கும் தெரியவில்லை. இதனை தொடர்ந்து மணிமேகலை அவர் கிராமத்தில் நிலம் வாங்கி, farm ஹவுஸ் கட்ட போவதாக புகைப்படங்களை வெளியிட்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் மணிமேகலை குறித்து குக் வித் கோமாளி நடுவர் செஃப் தாமு சில விஷயங்கள் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, மணிமேகலை என்னுடைய மகள் போன்றவள். அவர் ஷோவை விட்டு வெளியேறியது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவருடைய ஜோக் எல்லாம் miss பண்ணுறேன். அவர் விலகியது அவருடைய விருப்பம். அடுத்து அவர் தொகுப்பாளராக கேரியரை ஸ்டார்ட் செய்ய இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
மேலும் அவரது எதிர்காலம் ரொம்ப முக்கியம். இதனால் தான் இந்த முடிவு என்று மணிமேகலை விலகியதை சூசகமாக கூறினார். இதை வைத்து பார்க்கும் பொழுது மணிமேகலை anchor ஆக ஏதோ ஷோவில் வர போகிறார் என்று தெரிகிறது. இதற்கு முன்னர் கோமாளியாக இருந்த பாலா KPY சாம்பியன்ஸ் ஷோவை தொகுத்து வருவதால் அவர் CWC ல் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.