டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சாமானிய மக்கள் பயன்படுத்தும் சில முறைகள் மற்றிருப்பதாக கூறப்படுகிறது. அது என்னவென்று பார்க்கலாம். இந்த மாற்றங்களில் கேஸ் சிலிண்டர் விலை, ரயில் சேவைகளும் மாற்றம் செய்யப்பட இருக்கின்றன.
சாமானிய மக்களின் தேவைகள் மற்றும் பயன்பாடுகள்:
இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் முக்கால்வாசி பேர் நடுத்தர மக்கள் தான். அந்த வகையில் அவர்கள் அதிகமாக பயன்படுத்தும் சில அத்தியாவசிய தேவைகள் மற்றும் பயன்பாடுகளில் மாற்றம் நிகழ உள்ளன. அது என்னவென்றால்,
வங்கி பரிவர்த்தனைகள்:
சராசரியாக இந்த பொது முடக்க காலத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்துவது, வங்கி பரிவர்த்தனைகளை தான். வங்கிகளில் RDGS என்ற ஒரு முறை உள்ளது. கடந்த மாதங்களாக அவை காலை 7 மணி முதல் மாலை 6 வரை மட்டுமே செயல்பட்டிருந்தது. ஆனால், வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த RDGS சேவையினை மக்கள் 24 மணி நேரமும் பயன்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்சூரன்ஸ் பயன்பாடு:
இன்சூரன்ஸ் தொகையினை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 50 சதவீதமாக குறைத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பாதி பிரிமியத்துடன் தொடரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் வங்கியில் புதிய நெறிமுறைகள்:
பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இனி வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஏடிஎம் இல் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க வேண்டும் என்றால் OTP மற்றும் Password இருந்தால் மட்டுமே பணத்தினை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த கட்டுப்பாடு பஞ்சாப் நேஷனல் வங்கியின் 2.0 ஏடிஎமிற்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர் விலை:
ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். அதன்படி இந்த மாதம் 1 ஆம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ரயில் சேவைகள்:
பொது முடக்கம் காரணமாகி பல மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்த ரயில் சேவைகள் தற்போது தான் தொடங்கியுள்ளன.
‘அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டிங்க போல’ – வனிதாவை கலாய்த்த ரசிகர்கள்!!
இதனை அடுத்து அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் இன்னும் சில ரயில்கள் புதியதாக செயல்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.