தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று (ஜூன் 6) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த காலநிலை மாற்றத்தால், வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய அதிகபட்ச வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.