தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் எல்லா மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசாங்கம் அறிக்கை விடுத்துள்ளது.
கனமழை:
தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து விடாமல் பெய்து வருகிறது. மேலும் சில முக்கிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையால் ஏற்படும் பிரச்சனைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
குறிப்பாக மழையால் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படக் கூடாது என்பதற்காக கனமழை அதிகமாக பெய்யும் சில முக்கிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.,60% சுங்க கட்டணம் குறைப்பு! மத்திய அமைச்சர் உறுதி!!
அதாவது தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்க இருப்பதால் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வருகிற கனமழையால் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க தயார் நிலையில் வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகர ஆணையருக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி மீட்பு பணி குழுவுக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.