மக்களே எச்சரிக்கை.., தமிழகத்தில் நாளை 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

0
மக்களே எச்சரிக்கை.., தமிழகத்தில் நாளை 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!!
மக்களே எச்சரிக்கை.., தமிழகத்தில் நாளை 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நிலையில் தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் நாளை மழைபெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் லேசான முதல் கனமழை வரை பெய்ய கூடும். மேலும் நாளை சென்னை, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், குமரி, நெல்லை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக மக்களே…, தொடர் விடுமுறைக்காக சிறப்பு ஏற்பாடு…, போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here