இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சொந்த வீடு இல்லாமல் பல சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சொல்லப்போனால் சொந்த வீடு கட்டுவது பலரின் கனவாகவே ஆகி விட்டது. இதனால் வீட்டு வசதி கடன், மத்திய மாநில அரசுகளின் மானியங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதற்கேற்ப மத்திய மாநில அரசுகள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வீட்டு வசதி கடன் மற்றும் மானியங்களை மத்திய அரசு “ஆவாஸ் யோஜனா” திட்டத்தின் மூலம் விரைவில் வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 1,000 பழங்குடியினர் மற்றும் 500 நரிக்குறவர்களுக்கு, ரூ.45 கோடி மதிப்பீட்டில் இலவச வீடு கட்டி தர உள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்படி இரட்டிப்பு மகிழ்ச்சி செய்தி வெளிவந்துள்ளதால், பலரும் மகிழ்ச்சியுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து உள்ளனர்.
என்னது.., 25 பைசாவிற்கு பட்டுப்புடவை இலவசமா? திண்டுக்கல்லில் திரண்ட பொதுமக்கள்!!