தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை எனவும் மேலும் இது குறித்தான கோரிக்கைகள் எதுவும் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு தற்போது தெரிவித்து கொங்குநாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தமிழ்நாட்டின் மேற்கு மண்டல பகுதியை தனியாகப் பிரித்து ‘கொங்கு நாடு’ என்று, அதை தனியாக ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றும் திட்டம் மத்திய அரசிடம் இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு சில செய்திகள் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் ராமலிங்கம், பாரிவேந்தர் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்தா ராய் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலால் கொங்கு நாடு குறித்து எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
அதாவது நித்யானந்தா ராய் அளித்துள்ள பதிலில் “தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை. மேலும் இது குறித்தான கோரிக்கைகள் எதுவும் பரிசீலனையில் இல்லை” என தெரிவித்துள்ளார்.இதன் மூலம் கொங்குநாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்