
நாடு முழுவதும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2004ஆம் ஆண்டு முதல் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) அமல்படுத்தப்பட்டது. ஆனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இன்றளவும் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதாவது NPS அறிவிப்பாணை வெளியிடப்பட்ட 22.12.2003 ஆம் தேதி முந்தைய ஆட்சேர்ப்பில் பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வர இருப்பதாக வட்டாரங்களில் பேசி வருகின்றனர். இருந்தாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., இந்த தேதியில் கடையடைப்பு இல்லை? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!