தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் வாங்கும் அட்டைதார்களே உங்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
ரேஷன் கார்டு ரத்து:
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் ஒவ்வொரு ஏழை எளிய மக்கள் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையிலும், இலவசமாகவும் கிடைக்க உதவுவதற்காக அரசாங்கம் சார்பாக நியாய விலைக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய அரசின் உதவிகளும் இந்த ரேஷன் கார்டு மூலமாக தான் கிடைக்கிறது. இந்நிலையில் ரேஷன் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது நாட்டில் பெரும்பாலான ரேஷன் கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ரேஷன் அட்டையை பயன்படுத்துபவர்கள் வருமான வரி செலுத்துபவர்கள், 10 மையில் வரை சொந்தம் நிலம் போன்றவை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். மேலும் ரேஷன் கடையில் வாங்கும் அரிசியை வைத்து ஊழல் செய்பவர்கள் மற்றும் ரேஷன் கார்டு தவறாக பயன்படுத்துவார்கள் ஆகியோரின் கார்டுகள் ரத்து செய்யப்படும்.
தமிழகத்தில் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு கட்டாயமா? அமைச்சர் அதிரடி விளக்கம்!!
இந்த திட்டத்தின் அடிப்படையில் ரேஷன் கார்டு வைத்திருக்க தகுதி இல்லாத நபர்களின் பட்டியலை ஊழியர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் அந்த பெயர்களைக் குறியிட்ட அறிக்கையினை மாவட்டத் தலைமையகத்துக்கு அனுப்புவார்கள். அதன் பின்னர் அவர்களின் ரேஷன் அட்டைகள் முழுவதுமாக ரத்து செய்யப்படும். இந்த திட்டத்தால் ஏராளமான மக்கள் பயன்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.