அரசு ஊழியர்களுக்கு, தீபாவளி சர்ப்ரைஸாக அகவிலைப்படி 38% ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதால், மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர்.
அரசு அறிவிப்பு :
அரசு ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடப்பு சூழ்நிலை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். கொரோனா காலகட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக, இந்த தொகை உயர்த்தப் படாமல் இருந்தது. பின்பு கணிசமாக உயர்த்தப்பட்ட இந்த, அகவிலைப்படிக்கான நிலுவைத் தொகை இதுவரை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% சதவீதம் அதிகரித்து, 38% ஆக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ் – அடுத்த 3 மாதத்திற்கு கூடுதல் அரிசி விநியோகம்! அரசு அதிரடி!!
இதனால் நாடு முழுவதும் உள்ள 50 லட்சத்துக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர். பண்டிகை கால சர்ப்ரைஸாக, மத்திய அரசு இவர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.