இந்தியாவில் அதிகரித்த வேலைவாய்ப்பு – மத்திய பணியாளர் அமைச்சகம் தகவல்!!

0

இந்தியாவில் நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டில் உற்பத்தி மற்றும் கட்டுமானம் சார்ந்த துறைகளில் 29 சதவீதம் வேலை வாய்ப்பு பெருகியுள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு அதிகரிப்பு:

இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது பலதரப்பட்ட மக்களின் கருத்தாக உள்ளது.  இந்த நிலையில், கடந்த 2013- 14 ம் நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் 2.37 கோடி என்ற அளவில் இருந்த வேலைவாய்ப்பு தற்போது மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

அதாவது, நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டில் உற்பத்தி மற்றும் கட்டுமானம், வர்த்தகம் சார்ந்த ஒன்பது துறைகளில் 29 சதவீதம் அதாவது 3.8 கோடி வரை வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தகவல்கள் அனைத்தும், தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here