தமிழக அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு..!
தமிழகத்தில் சென்னை வந்துள்ள மத்திய குழுவினர் சுகாரத்தாரா துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திவிட்டு ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் 5 பேர் குழு ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள மாநிலமாக தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 3வது முறையாக குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு..!
ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்றும் இறந்தவர்களின் விவரம் மற்றும் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் கேட்டு வருகின்றனர். மேலும், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்துகள் பற்றியும் கேட்டறியப்பட்டு வருகின்றனர்.
தனியார் கல்லூரிகளில் 3 தவணைகளாக கல்விக் கட்டணம் வசூல் – தமிழக அரசு அனுமதி!!
இதனைத்தொடர்ந்து சென்னை புளியந்தோப்பு பகுதியிலும் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர். இவர்களுடன் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோரும் பங்கேற்று வருகின்றனர்.