குட் நியூஸ்! தமிழக பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு புதிய திட்டம் – குவியும் பாராட்டு!

0

பேருந்துகளில் குற்றங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக CCTV கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

பேருந்தில் கேமரா:

தற்போது நடைமுறையில் இருக்கும் தி.மு.க அரசு மக்களுக்காக பல புது புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வரிசையில் தமிழகத்தில் பெண்களுக்கான இலவச நகர பேருந்துகளை அடையாளம் காட்டும் விதமாக ‘பிங்க்’ நிறத்தில் பேருந்துகள் தற்போது மாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. மேலும் அதே நாளில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக இலவச மெட்ரோ ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் மக்களுக்காக புதிதாக ஒரு திட்டத்தை அமுல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, பேருந்துகளில் செயின் பறிப்பு , பணம் திருட்டு, ஓடும் பேருந்தில் ஏறுவது இறங்குவது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த குற்றங்களை தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து உயர் ரக சிசிடிவி கேமராக்களை வாங்கி பஸ்களில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநகர் போக்குவரத்து துறை உயரதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் 2,500 மாநகர எம்டிசி பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here