தமிழக பள்ளிகளின் பாடத்திட்டங்களை மாற்றியமைத்து பாடத்திட்டங்கள் அனைத்தும் குறைக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டை போல் பாடத்திட்டங்ககள் குறைக்கப்படும்..
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடிய நிலையில் உள்ளன. கொரோனா பரவல் குறைந்த பின்னே கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி கற்பித்து கொடுக்க முடியவில்லை அதுமட்டுமில்லாமல் மாணவர்களின் கல்வி நிலை மாறிவிடும் என்றும் மாணவர்களின் நலன் கருதி கடந்த ஆண்டு பாடத்திட்டங்கள் 30% குறைக்கப்பட்டது. அதே முறையை இந்த ஆண்டும் நடத்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
அதேபோல் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பின் கல்வியாண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு 2 விதமாக பொதுத்தேர்வுகளை நடத்த முடிவெடுத்துள்ளது. இந்த பொது தேர்வுகளை அனைத்தும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களில் இருந்தே நடத்தப்படும். பயிற்சிகள், மதிப்பெண்கள் மற்றும் முடிவுகள் அனைத்தும் குறைக்கப்பட்ட பாடதிட்டங்களின் அடிப்படையில் தான் எடுக்கப்படும். கடந்த ஆண்டிலிருந்தே பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமே நடத்தபட்டு வருகின்றன.
ஆன்லைன் மூலம் மாணவர்கள் அனைவரும் சரியான முறையில் பாடங்களை கவனிப்பது இல்லை. அவர்களின் சிந்தனைகள் ஒருநிலையில் இல்ல என்பதால் 9 ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் அனைத்தும் குறைக்கப்படும். சி.பி.எஸ்.இ நிர்வாகம் எப்படி பாடத்திட்டங்ககளை குறைத்ததோ அதேபோல தமிழக பள்ளிகளின் பாடத்திடங்கள் விரைவில் குறைக்கப்படும். அதற்கான ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கிறது என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்