அனைத்து துறைகளிலும் சாதித்து வரும் பெண்கள் மாதவிடாய் தினங்களில் உடல், மன ரீதியாக மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் அரசு பணிகளில் உள்ள பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறையை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதேபோல் சமீபத்தில் நாட்டிலேயே முதல் முறையாக உயர் கல்வி நிலைய மாணவிகளுக்கு கேரள அரசு மாதவிடாய் காலங்களில் விடுமுறை கட்டாயமாக்கியது. இதைத்தொடர்ந்து கேரளாவில் உள்ள லேபர் இந்தியா பப்ளிக் CBSE ஸ்கூல் விடுமுறை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம் இந்த அறிவிப்பை தெரிவித்த நாட்டின் முதல் CBSE ஸ்கூல் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
மேலும் பருவமடைதல் ஆலோசனை, சானிட்டரி பேட், பாலியல் ஆரோக்கிய விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இப்படி பெண்களின் உணர்வை மதிக்கும் வகையில் கேரள மாநிலம் அறிவிப்புகளை வெளியிடுவதால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.