சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த முடிவு ஓரிரு தினங்களில் வெளியீடு – பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!!

0

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும். அதற்கு  பின்பே, தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு குறித்து அறிவிப்பிற்கு பிறகு தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும். மத்திய அரசின் தேர்வு நடத்தும் தேதிகள் வந்த பிறகு தமிழக அரசு முடிவெடுக்கும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும்  அவர் “ஆன்லைன் வகுப்பு துவங்கும் முன்னர் பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக்கட்டணம் தொடர்பான நடவடிக்கை எடுக்க அமைக்கப்பட்ட குழுவை மேலும் வலுப்படுத்த திட்டம் உள்ளது. இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here