சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என வெளியான தகவல் பொய்யானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்:
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலை 1ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனை எதிர்த்து பெற்றோர்கள் சார்பில் தொடங்கப்பட்ட வழக்கில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஏற்கனவே நடைபெற்ற 3 தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும், மாநில அரசுகளின் கருத்துக்கள் அடிப்படையில் தேர்வு ரத்து குறித்து முடிவெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 13ம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 11ம் தேதியும் வெளியிடப்படும் என வெளியான தகவல் பொய்யானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என கூறப்பட்டு உள்ளது.