சாத்தான்குளம் வியாபாரிகள் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் கோரிக்கை..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை மூலம் விசாரிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்து இருந்தார்.
ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசி இலக்கு சாத்தியமற்றது – இந்திய அறிவியல் கழகம் அறிக்கை!!
முதல்வரின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளதையும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே 5 பேரை சிபிசிஐடி கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் வழக்கு சிபிஐக்கு மாறியுள்ளது.
மத்திய அரசு அறிக்கை..!
முதல்வரின் கோரிக்கையை ஏற்று சாத்தான்குளம் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை விசாரணைக்கு ஏற்றது சி.பி.ஐ. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.