இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட தமிழக மாணவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது ஆள்மாறாட்டம் செய்து அவர்களுக்கு உதவிய 8 வடமாநில மாணவர்கள் மற்றும் 2 மாணவிகளின் புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
அதிரவைத்த ஆள்மாறாட்டம்..!
தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த நீட் தேர்விலும் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட செய்தி அனைவர்க்கும் அதிர்ச்சி அளித்தது. இந்த முறைகேடு விசாரணையில் சிபிசிஐடி போலீசார் தேனி மருத்துவ கல்லூரியில் படித்த சென்னை மாணவர் உட்பட 3 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவியை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு உதவிய வடமாநில மாணவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு சிபிசிஐடி போலீசார் அவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 94438-84395 என்ற எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |