கொரோனா விதிமுறைகளை மீறியதாக கமல் மீது வழக்கு – போலீசார் நடவடிக்கை!!

0

சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த கமல், கொரோனா விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரங்களில் கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நடிகர் கமல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக மக்கள் நீதி மய்யம் சார்பில் இரண்டு கட்ட தேர்தல் பிரச்சாரங்கள் முடிவு பெற்றிருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு கட்சிகளும் மக்கள் வாக்குகளை கவரும் விதத்தில் வித்தியாசமான தேர்தல் அறிக்கைகளை அறிவித்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை – தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்!!

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திருச்சி மலைக்கோட்டை பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். திருச்சி மலைக்கோட்டையின் சறுக்குப்பாறை பகுதியில் கொரோனா விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக நடிகர் கமல் மீது புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் கமல் உட்பட மக்கள் நீதி மய்யத்தின் 650 பேரின் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here