டிக்டாக் சேலஞ்ச் காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கார் திருட்டு அதிகரித்து வருவதாக போலீசார் ஷாக் ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது, நியூயார்க் நகரத்தில் கியா அல்லது ஹூண்டாய் கார்களை ஓட்டி வரும் நபர்களிடம் லிப்ட் கேட்பது போல ஏறிக்கொள்ளும் திருடர்கள் பின்னர் அந்த ட்ரைவரை மிரட்டி காரை திருடிச் செல்கின்றனராம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த திருட்டு சம்பவத்திற்கு டிக்டாக் சேலஞ்ச் தான் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், டிக்டாக் சேலஞ்ச் மூலமாக நியூயார்க்கில் கடந்த 8 மாதங்களில் 10 ஆயிரத்து 600 கார்கள் திருடப்பட்டுள்ளதாகவும், இந்த கார் திருட்டு 25 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், திருட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படுபவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது கூடுதல் தகவல்.