நடிகர் சுஷாந்த் சில வருடங்களுக்கு முன், தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உறவினர்கள் ஐந்து பேர் கார் விபத்தில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் உறவினர்கள் மரணம்:
பாலிவுட் திரை உலகத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருந்தார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள தனது வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் இந்த இறப்பு, பாலிவுட் சினிமாவில் ஈடுகட்ட முடியாத ஒன்று என்று ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.
அவரது மறைவு ஏற்படுத்திய வடுவே இன்னும் ஆறாத நிலையில், தற்போது அவரது குடும்பத்திற்கு மிகப்பெரிய ஒரு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, பிகார் லக்கி சராய் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் ஆறு பேர் அண்மையில் உயிரிழந்துள்ளனர். அதில் ஐந்து நபர்கள் நடிகர் பிரசாந்தின் நெருங்கிய உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்