தமிழகத்தில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரித் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த இயலாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதி உள்ளார்.
கல்லூரித் தேர்வுகள்:
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியமடைந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் ஒத்திவைக்கப்பட்ட பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுமாறு எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர். மஹாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் எந்த மாநிலத்திலும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யாமல், யுஜிசி குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.
தமிழகத்திலும் 9 – 12 வகுப்பு வரை 30% பாடங்கள் குறைப்பு – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
தற்போது இருக்கும் சூழ்நிலையில் மாணவர்களுக்கு நேரடியாக தேர்வு நடத்துவது என்பது சாத்தியமற்றது. மேலும் பல்வேறு கல்லூரிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளதால் இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஆன்லைனில் தேர்வுகளை நடத்துவதிலும் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் தமிழகத்தில் செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் நடத்த இயலாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை நடத்துவது குறித்த முடிவை அந்தந்த மாநிலங்களே எடுக்கும் வகையில் அனுமதி வழங்க வேண்டும் என கோரப்பட்டு உள்ளது.